உதகை, நவ. 17- கேரள தமிழக எல்லைப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்தை துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூடலூர், பந்தலூர் பகுதி பொதுமக்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகள் கர்நாடக - கேரள மாநில எல்லை களை ஒட்டி அமைந்துள்ளன. கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக் கைகள் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் அண்டை மாநிலங்களுடனான பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலை யில், தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் சென்று வர இரு மாநில அரசு பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. தற்போது நீலகிரியி லும், கர்நாடக மாநிலத்திற்கு பேருந்துகள் சென்று வருகின்றன. ஆனால், கேரள மாநிலத்திற்கு பேருந்து போக்குவரத்து இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
குறிப்பாக மரப்பாலம், நாடுகாணி, தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் கேரளா பகுதிகளுக்கு வேலைகளுக்கு சென்று வருவோர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வேலை இன்றி தவித்து வருகின்ற னர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தினமும் தனியார் வாகனங்களில் தமிழக எல்லை வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கேரள தனியார் வாகனங்களில் வேலைக ளுக்கு சென்று திரும்பி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு போக்குவரத்து செலவு கூடுவதுடன், கால விரயமும் ஏற்படு கிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கேரளா பகுதிகளில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தமிழக - கேரளா மாநிலங்கள் இடையே அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், அப்ப குதி பொதுமக்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.