tamilnadu

img

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 உதகை, செப்.12- ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடக்கோரி பிஎஸ் என்எல் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் உதகை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியத்தை 1.1.2017 ஆம் தேதி முதல் 15 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். உரிய தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் உதகை யில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளார் வி.மகேஷ்வரன் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.  முன்னதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எல்.கிறிஸ்டோபர், கிளை செயலாளர் ஆர்.பசுபதி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. விஜயகுமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி எச்.யூசுப் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார். அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் துணை பொருளாளர் பங்கஜவல்லி கோரிக் கையை விளக்கி உரையாற்றினார். இதில் ஏராள மானோர் பங்கேற்றனர்.