tamilnadu

img

குடிநீர் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

உதகை, ஆக. 30 - குன்னூர்  மூலக்கடை பகுதியில் முறை யான குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்னூர்  மூலக்கடை பகுதியில் கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் விநியோகிக்கப் படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம்  பலமுறை தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் பொருட் படுத்தாமல் சாலைமறியலில் ஈடுபட முயன் றனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த குன்னூர் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில்,  நகராட்சி ஆணையாளரிடம் திங்க ளன்று பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து  அனைவ ரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி யில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

;