tamilnadu

img

அதிகரட்டியில் மந்தகதியில் செப்பனிடும் சாலைப்பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, அக். 26 - அதிகரட்டி அருகே சாலை  செப்ப னிடும் பணி மந்தகதியில் நடைபெற்ற வருவதால் அதன் சுற்றுவட்டார கிராம  மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.  எனவே, விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட முட்டிநாடு, கோலனி மட்டம் பகுதியில் சாலை செப்பனிடும் பணி மந்தகதியில் நடை பெற்று வருகிறது. இதனால் செலவிப் நகர், கோலனி மட்டம், ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட  கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இந்த சாலையின் ஓரங்களில் தடுப்பு சுவர் அமைப்பதற்கு தோண் டபட்ட இடங்களில் மண்சரிவு ஏற் பட்டு, ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டு உள்ளது.

இதனால் விவசாய விளைப்பொ ருளை ஏற்றிச்செல் லும் லாரி உள் ளிட்ட வாகனங் கள் கவிழ்ந்து விபத் துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட் டுள்ளது.  மேலும், இப்ப குதிகளில் விபத்தை தடுக்க  எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையோ, தடுப்பு அமைப்பு களையோ ஒப்பந்ததாரர்கள் ஏற்ப டுத்தவில்லை. அதேபோல் நடைபெ றும் சாலை பணிகளை அதிகாரிகள் யாரும் கண்காணிப்பதும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித பலனும் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகள் தலையிட்டு இப்பகுதியில் மந்தகதியில் நடைபெறும் சாலை செப்பனிடும் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.