உதகை, ஜூலை 18 - நீலகிரியில் மின் இணைப்பு இல் லாத மாணவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என வாலிபர் சங்கம் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளர் சி.மணிகண்டன் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது,
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் உள்ளனர். தற் போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரி கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் தற்சமயம் மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் நடத்தப் பட்டு வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் வசிக்கும் பெரும்பான்மை யான மாணவர்களின் வீடுகளில் பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை.
குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதி களில் வசிக்கும் மக்கள் பல ஆண்டு களாக மின்வசதி இல்லாமல் இருட்டு வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் மின் இணைப்பு கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு பாராமுக மாகவே இருந்து வருகிறது.
அதே போல் இவர்களில் பலரிடம் இணைய வழிக் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு வருமான மும் இல்லை. பல இடங்களில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மற் றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் சேவை முற்றிலும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாணவர்கள் இணையவழி மூலம் கல்விகற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். எனவே இப்பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையி்ல் மின் இணைப்பு வழங்கிடவும், செல்போன் டவர் அமைத்து தடையில்லாமல் செல்போன் சேவை கிடைத்திடவும். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.