புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள தெப்பக்காடு பகுதியில் பலங்குடியின பெண்ணை நேற்றிரவு புலி தாக்கி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அத்திரமடைந்த மக்கள் வனத்துறையினரின் அசட்சியத்தை கண்டித்தும் புலியை உடனடியாக பிடித்து விடவேண்டுமென கூறியும் முதுமலை - மசினக்குடி சாலையில் பலங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது குறிப்பிடத்தக்கது.