உதகை,பிப்.24- நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் சனியன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எல்லையோர ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. ஆதிவாசி பழங்குடி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தோடு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மக்கள் குறை தீர்க்கும் முகாம் சனியன்று நடைபெற்றது. மஞ்சூர், மசினகுடி, கொலக்கம்பை, சோலூர்மட்டம், அம்பலமூல ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் எராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.