tamilnadu

நிலுவைத் தொகையை வழங்கிடுக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் போராட்டம்

உதகை, ஆக.19 - பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் முதல் வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை பாக்கியை வழங்க வேண்டும். மருத்துவ காப் பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2019 ஏப்ரல் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதி யர்களுக்கு நிலுவையிலுள்ள பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் உதகையில் உள்ள சேரிங் கிராஸ் அஞ்சலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எம்.சண்முகம், செயலாளர் கே.ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.