உதகை, ஜூலை 19- மஞ்சூர் அருகே பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் எம ரால்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக பாலி யல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எமரால்டு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் வன் கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் தௌலத் நிஷா, சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹேமலதா, உதகை மகளிர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.