tamilnadu

img

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள் - பொதுமக்கள் பீதி

உதகை, அக். 6 - கூடலூர் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட மருத்துவ கழிவுகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பழைய பேருந்து நிலையம், கள்ளிக்கோட்டை சாலை பகுதியில் அமைந்திருக்கும் கனரா வங்கி அருகில் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் சிதறி கிடப்பதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த னர். குறிப்பாக,  ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை வீச பட்டு கிடந்தது.  

இதுகுறித்து நகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததையடுத்து, மருத்துவ கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி யில் இதுபோன்ற மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டுள்ள சம்ப வம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே, மருத்துவ கழிவுகளை வீசிச் சென்ற வர்களை கண்டுபிடித்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.