உதகை அக்.26- உதகை அருகே காந்தள் ஸ்லேட்டர் ஹவுஸ் யூஎம்சி லைன் பகுதியில் கனமழையால் இடிந்த வீடுகளை மாவட்ட நிர்வாகம் சீர மைத்து தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். உதகை நகராட்சிக்கு உட்பட்ட காந்தள் ஸ்லேட்டர் ஹவுஸ் யூஎம்சி லைன் பகுதியில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில், இவ்வீடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஏற்கனவே, போதிய வேலை வாய்ப்பு இல் லாததினால் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். இச்சூழலில் வீடுக ளையும் இழந்துள்ளதால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளோம். அதேநேரம், மாவட்ட அரசு நிர் வாகத்தின் நிதி உதவி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இத னால் மழையால் இடிந்த சுவரைக் கூட கட்டமுடியாமல் பிளாஸ்டிக் காகிதத்தை வைத்து மூடி இருக் கிறோம் என வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை காலத்தில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும், இப்பகுதியில் நடைபாதையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கழிவு நீர் குழாய் பதிக்க தோண்டிய குழியை மூடாமல் சென்றதால் மேலும் இன்னலுக் குள்ளாகி உள்ளனர். ஆகவே, நடை பாதையை சீரமைக்கவும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.