உதகை, நவ. 9- அதிகரட்டி அருகே நடைபாதை இல்லா ததால் இறந்தவர்களை தூக்கி கொண்டு கால்வாயின் மீது நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது சேமந்தாடா. இங்கு சுமார் 500க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகு தியில் நடைபதை வசதி இல்லாததால் திறந்த நிலையில் உள்ள கால்வாயின் மீது மக்கள் நடந்து செல்கின்றனர். இங்கு தெரு விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பாதையில் நடந்து செல்ல முடியாமல் அப்பகுதியினர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், யாருக்காவது உடல்நிலை பாதித்தாலோ அல்லது யாரேனும் உயிரி ழந்தாலோ அவர்களை சுமந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இப்பகுதியில் உடனடியாக நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.