tamilnadu

img

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக

உதகை, நவ. 24- சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி உதகையில் இந்திய மாணவர்  சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை ஐஐடியில் படித்த கேரளாவைச் சேர்ந்தவர் மாணவி பாத்திமா லத்தீப். இவரை பேராசி ரியர்கள் சிலர் மனரீதியாக சித்ர வதை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தனது மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களின் பெயர்களை அவரது அலைபேசியில்  பதிவு  செய்து வைத்துள்ளார். இருந்த போதும் போலீசார் சம்பந்தப் பட்டவர்களை மீது இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை.  எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக  விடுதி கட்டண உயர்வை கண்டித்து  போராட்டத்தில்  ஈடு பட்ட மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக  தாக்குதல் நடத் தினர். இதைகண்டித்து கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஞாயிறன்று மாணவர் சங்கத்தினர், வாலிபர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க நிர்வாகி பா.யோகராசு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ஆகாஷ் துவக்கி வைத்தார்.  கோத்தகிரி பகுதி  அமைப்பாளர் வி. குமரன், எஸ்.விக் ரம், பி.சுகந்தன், எஸ்.பகத்சிங்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோத்தகிரி இடை கமிட்டி தலைவர் டி.சுந்தர்,  கமிட்டி உறுப்பினர் ஜீவா ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.   இடைகமிட்டி செயலாளர் வி. மணி கண்டன் நிறைவுரையாற்றினார்.  இதில் எம்.ரித்திக், எஸ்.விமல் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.