tamilnadu

img

மனித நேய வார விழா

உதகை, ஜன. 30- உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மனித  நேய வார விழா நிறைவு நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது.  நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வியாழனன்று நடைபெற்ற மனித நேய வார  விழா நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தலைமை வகித்தார். உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேசன், கூடலூர் சட்டமன்ற உறுப்பி னர் திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சியில் 67 பயனாளிகளுக்கு வன உரிமைச் சட்டம் 2006ன் கீழ் தனிநபர் உரிமைகளும், இரண்டு பழங் குடியின சங்கங்களுக்கு வாழைத்தோட்டம் அமைத்திட ரூ.2 லட்சத்திற்கான காசோலை உள்ளிட்ட மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ. 7.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  மேலும் மனித நேய வார விழாவையொட்டி நடத் தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலர் குரு சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

;