tamilnadu

img

மருத்துவத்துறை ஊழியர் குடியிருப்பில் சுகாதார சீர்கேடு

உதகை, நவ. 11- உதகையில் உள்ள மருத்துவத்துறை ஊழியர் குடியிருப் பில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், அதனை சீரமைக்க  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை ஜெயில் ஹில் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிப்பறைகளில் அடைப்பு  ஏற்படுவதால், நடைபாதைகள் முற்றிலும் சிதலமடைந்தும், கழிவுநீர் வெளியேறும் கால்வாய்கள்  உடைப்பும் ஏற்படு கிறது. இவற்றை சீர்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பொதுப்பணித்துறையினர் நடைபாதை மற்றும் கால் ாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால்,  இங்குள்ள கால்வாய்களை முழுமையாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டு சென்று  விட்டனர். இதனால் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும், இங்குள்ள கழிப்பறையின் அடைப்பை நீக்காமல் சென்றுள்ளனர். இதனால் கழிப்பறையை யாரும் பயன்படுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ மனை ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.