உதகை,ஜன.26- சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ஞாயிறன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில், சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், குன்னூர் ஓய்ஸ் மென் கிளப், சேரம்பாடி சமத்துவ பொங்கல் விழா குழு, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகிய அமைப்பினர் ஒருங்கிணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தி னர். இந்த முகாமிற்கு சேரம்பாடி சமத்துவ பொங்கல் விழாக்குழு நிர்வாகி அன்பழகன் தலைமை வகித்தார். கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலை வர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பி ரமணியம், குன்னூர் ஓய்ஸ் மென் கிளப் செயலாளர் தினேஷ் நிர்வாகி அனிதா, ஷாலோம் டிரஸ்ட் நிர்வாகி சுப்ரமணியம் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, உதகை கண் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோருக்கு கண் சம்பந்த மான குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 45 பேருக்கு கண் புரை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை இலவச கண் அறுவை சிகிச்சை காக உதகை அரசு மருத்துவ மருத்துவம னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் கனை யேந்திரன், நுகர்வோர் மைய நிர்வாகி தேவதாஸ், சமத்துவ பொங்கல் விழாக் குழு நிர்வாகிகள் பிராம்ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.