tamilnadu

img

நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமான படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கவிருந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள நஞ்சப்பா சத்திரம் எனும் இடத்தில் கடும் மேகமூட்டம் நிலவியதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் இதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமான படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

;