tamilnadu

மின்சாரம் தாக்கி யானை பலி - வனத்துறையினர் விசாரணை

உதகை,நவ. 4- பிதிர்காடு அருகே மின்சாரம் தாக்கி யானை கருகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்குட்பட்ட பிதிர்காடு அருகே ஆனையப்பன் சோலை பகுதியில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையி னர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோ தனை நடத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு உணவு தேடி இப்பகுதிக்கு வந்த யானை, மின்சாரம் கம்பி தாக்கி அதிலி ருந்து வந்த தீயினால் கருகி இறந்திருக்கலாம் என வனத் துறையினர்‌ தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.