tamilnadu

முதுமலையில் வாயில் காயங்களுடன் யானை பலி

நீலகிரி, ஜூலை 13- நீலகிரி மாவட்டம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி தெற்கு பீட் தட்டலட்டி அருவி அடி வாரத்தில் நீரோடையின் பாறைகளுக்கிடையில் வாயில் காயங்களுடன் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனை அப்ப குதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் கண்டு உயர் அதிகாரிகளுக்கு தெரி வித்தனர். இந்த யானை ஓசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத் திய நிலையில் வனத்துறை யினரால் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதி யில் கடந்த மாதம் விடப் பட்ட சுமார் 16 வயது ஆண் யானை என தெரிய வந்தது.  

இதையடுத்து கள இணை இயக்குநர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் யானை உடற்கூறாய்வு செய்யப் பட்டு புதைக்கப்பட்டது.