tamilnadu

மிளகு பயிரைத் தாக்கும் வாடல் நோய் - விவசாயிகள் கவலை

உதகை, செப். 7- நீலகிரியில் மிளகு பயிரை வாடல் நோய் வேகமாக தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வரு கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தேயிலை, காப்பி உள்ளிட்ட செடிகளை பயிரிட்டு வருகிறார் கள். அவற்றின் நடுவில் ஊடுபயிராக குருமிளகையும் பயிரிட்டு வருகின்றனர். இப்பயிர் நடவு செய்யப் பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளில் நன்கு வளர்ந்து காய்க்கத் தொடங்கும். பின்னர் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் அறுவடை செய்வார்கள்.

பின் னர் அதனை பெரிய மிளகு, சிறு மிளகு என தரம் பிரித்து விற்பனை செய்வார்கள்.  இந்நிலையில், குறுமிளகு பயிரை வாடல் நோய் வேகமாக தாக்கி வருகிறது. இது ஒரு வகை பூசண நோயாகும். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். இதனால் நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும். நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்துவிடும். இதனால் குறுமிளகு பயி ரிட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலையில் உள்ள னர். மேலும் இதற்கான இழப்பீடு வழங்க அரசும், தோட்டக்கலைத்துறையும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.