tamilnadu

img

மின்வாரியத்தை தனியார்மயமாக்காதே மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

உதகை,நவ. 5 - மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து நீலகிரியில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  மின்வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்க ளும் போனஸ் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை மின் நிலைய பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்கிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  உதகை, குந்தா, எமரால்டு, மசினகுடி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு புத னன்று தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.  இதில்  சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  நிர்வாகி கள் முரளிதரன், இராமகிருஷ்ணன், லாசர், சகாய நாதன்,  அங்கையர்கன்னி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சிவக்குமார், அண்ணா தொழிற்சங்கத்தின் ரவி, பெட ரேஷன் சங்கத்தின் சசிகுமார், பொறியாளர் சங்கத்தின் வீரப்பன், அலிரகுமான், ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஜெயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.