tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 1  சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

உதகை, பிப். 1-  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வானது, ஏப்ரல் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு எழு தும் மாணவ, மாணவிகளுக்கு நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை, விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைப்பெற இருக்கின்றது.  இதன் துவக்க நிகழ்ச்சியானது வெள்ளியன்று உதகை யில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆ.ஜோதி மணி தலைமை வகித்தார். அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் கே.எம்.சரயு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நூலகர் ரவி  வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சி வகுப்பில் 80 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

;