tamilnadu

உதகை அருகே வாகனம் மோதி மான் பலி

உதகை, நவ. 17 - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதிய தால் மான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய  நெடுஞ்சாலையில் செவ்வாயன்று காலை மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாக னம் மோதியதால் மான் உயிரிழந்திருக்கலாம் என கூறப் படுகிறது. அதேநேரம், வாகனங்கள் மோதி வனவி லங்குகளின் உயிரிழப்பை தவிர்க்க வனத்துறையினர் வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அதேபோல் வாகனங்களை இயக்குவோர் குறைந்த வேகத்தில் எச்சரிக்கையுடன் செல்ல  வேண்டும் என்று  வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.