tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் ஹனீபா மறைவு

உதகை, செப். 4 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட மூத்த தோழர் ஹனீபா காலமானார். நீலகிரி மாவட்டம், அய் யங்கொல்லி பகுதியில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஹனீபா (75).  இவருக்கு மனைவி மற் றும் இரண்டு மகன்கள், இருமகள்கள் உள்ளனர். இவர் நில வெளியேற் றத்தை கண்டித்து நடை பெற்ற போராட்டத்தில் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலமானார்.  இவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன்,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.யோகண் ணன், ஊராட்சி தலைவர் அவராச்சன் (காங்கிரஸ்), திமுக கருப்பையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர் கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்ன தாக, ஹனீபா மறைவையொட்டி அய்யங்கொல்லி பகுதி வணிகர்கள் தாமாக முன்வந்து கடைகளை ஒரு மணி நேரம் அடைத்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

;