tamilnadu

மாணவர்களுக்கான திசைக்காட்டி கல்வி விழிப்புணர்வு முகாம்

உதகை, பிப். 23 - நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம் சார்பில் மாணவர்களுக்கு திசைக்காட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் நுகர் வோர் பாதுகாப்பு மையம், மக்கள் ஊடக மையம், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஞாயிறன்று பழங்குடியின மாணவர்க ளுக்கு திசைக்காட்டி கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  அம்பலமூலாவில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு ஆதிவாசிகள் நல சங்க திட்ட மேலா ளர் ரொனால்ட் தலைமை தாங்கினார். ஆதி வாசிகள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் கோகுல் வரவேற்று பேசினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளி முத்து, பொதுசெயலாளர் சிவசுப்பிரமணி யம், பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மக்கள் ஊடக மைய இயக்கு னர் சித்திர வேல் பேசுகையில், மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டு மெனில் தயக்கம் இல்லாமல் இருக்க வேண் டும். விளையாட்டு வீரர்கள் உரிய வழிகாட் டலுடன் சென்றால் எளிதில் சாதிக்க முடி யும். விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் மூலம் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகள் பெறலாம். விளை யாட்டு பயிற்றுநர், பள்ளிகளில் விளை யாட்டு ஆசிரியர்கள், ஜிம் போன்ற உடற் பயிற்சி நிறுவனங்கள் செய்தல், உடல் கட்ட மைப்பு துறைகள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற முடி யும். விளையாட்டு போட்டிகள் பங்கேற் போர் உடல்நலம்  பேணுதல் அவசியம். நமது திறமைகளை அறிந்து அதில் ஈடுபாட் டோடு பங்கேற்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து பந்தலூர் விளை யாட்டு ஆர்வலர் தாஸ் பேசுகையில், விளை யாட்டுகளில் பங்கேற்றவர்கள் கல்வி முதல், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற வாய்ப்பு உள்ளது. ஆர்வமுள்ள விளை யாட்டு வீரர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்க தயாராக உள்ளதாக என்றார். மேலும், பெண்களுக்கு விளையாட்டு துறையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் விளை யாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் பழங்குடியின மாண வர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்நி கழ்ச்சியின் இறுதியில் மாணவி சீதா நன்றி கூறினார்.

;