tamilnadu

பணம் இல்லாத ஏடிஎம் - பொதுமக்கள் அவதி

உதகை, அக். 13 - தேவர்சோலை பகுதியில் செயல்படாத ஏடிஎம் இயந்திரத்தினால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உதகையை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு  உட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்போர் அங்குள்ள இந்தி யன் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரின் பணத்தேவைக்கும் இந்த வங்கியின் ஏடிஎம் ஒன்றே பிரதான மாக உள்ளது. ஆனால், இந்த ஏடிஎம் வெகு நாட்களாக சரிவர இயங்குவதில்லை. இத னால் தோட்டதொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதியுற்று வரு கின்றனர்‌.

 மேலும், இதனை பயன்படுத்தி கொண்ட அங்குள்ள கடைகள் மற்றும் ஃப்ரவுசிங் செண்டர்கள் ஸ்வைப் மிஷன் மூலம் பணம் வழங்கி வருவதாகவும், அதற்கு அவர்கள் 10 சதவிகிதம் வரை கமிஷன் வசூலிப்பதாக வும் குற்றம்சாட்டுகின்றனர். இருப்பினும், மாற்று ஏடிஎம் வசதி இல்லாததால் வேறு வழியில்லாமல் மக்கள் வாங்கி செல்கின்ற னர். எனவே, இந்த செயல்படாத ஏடிஎம்- ஐ சரி செய்ய வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அதிக ஏடிஎம் வசதிகளை ஏற்படுத்தி தர வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.