tamilnadu

img

மழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் பொதுமக்கள் அவதி

உதகை, ஆக. 16-  கூடலூர் அருகே கனமழை காரணமாக அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி உள்ளனர்.  நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள நெல்லி யாளம் பேரூராட்சிக்குட்பட்ட புளியம்பழ கோழி, கொல்லி செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. இப்பா லத்தை அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் போக்குவரத்திற்காக உபயோகித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று பெய்த கனமழையால் அப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இத னால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி முற் றிலுமாக துண்டிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொடுத்திட வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேபோல், நீலகிரியில் உள்ள தேவர் சோலை - நெல்லைக்கோட் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற் பட்டு வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையில் சரிந்துள்ள மண்ணை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.