tamilnadu

img

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம்

உதகை, ஜன.23- நீலகிரி மாவட்டம், உதகையில் பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத் தினை புதனன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட்  திவ்யா கூறியதாவது, தமிழக அரசின் உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சுற்று லாத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனடிப் படையில் புதனன்று காலை 150 அரசுப் பள்ளி மாணவர் களை உதகை அரசு அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்கா, ஸ்டீபன் சர்ச்,  காஸ்மிக் ஆராய்ச்சி மையம் மற்றும் ரேடியோ அஸ்ட்ரானமி சென்டர் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. இச்சுற்றுலா விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

;