tamilnadu

கேரளாவில் வாலிபர் சங்க தலைவர்கள் படுகொலை- கண்டன ஆர்ப்பாட்டம்

உதகை, செப். 1 - கேரளாவில் வாலிபர் சங்க ஊழியர்கள் இருவர் காங் கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண் டித்து நீலகிரியில் வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம், வெங்ஙாரமூடு என்ற இடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளான ஹக் முகமது (24) மற்றும் மிதிலாஜ் (30) ஆகிய இருவரையும் காங்கிரஸ் குண்டர்களால் ஞாயி றன்று வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

இப்படுகொலையை கண்டித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் கோத்த கிரி கைகாட்டி பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்தில் வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி செயலாளர் வி.மணிகண்டன், பொருளாளர் பூவரசன், ஜீவா, இந்திய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படுகொலையை கண் டித்து முழக்கங்களை எழுப்பினர்.