tamilnadu

img

நிலுவை சம்பளத்தை உடனே வழங்கிடுக ஆஷா ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு

உதகை, அக்.4- நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார் பில் உதகையில் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடு பட்டனர். நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். பிரதி மாதம் 1 ஆம் தேதியன்று சம்பளம் வழங்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 18 ஆயிரமாக வழங்க வேண் டும். ஆஷா ஊழியருக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக நியமித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார் பில் உதகையில் உள்ள சுகாதார இணை இயக்குனர் அலுவலகத் தில் பெருந்திறள் முறையீட்டில் ஈடு பட்டனர். இதனையடுத்து சுகாதார இணை இயக்குனர் பொற்கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சில உடன் பாடுகள் ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இந்தப் பேச்சு வார்த்தையின் போது சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் ஜே. ஆல்தொரை,  தோட்டத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் எம்.ஆர். சுரேஷ், ஆஷா ஊழி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சீதா லட்சுமி, செயலாளர் கே.ஏ. சவுதா, பொருளாளர் இந்துமதி, துணைத்தலைவர் கேசனி ரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, இப்போராட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம், சிஐடியு முன் னாள் மாவட்ட தலைவர் வி.வி.கிரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் திரளான ஆஷா ஊழியர் கள் கலந்து கொண்டனர்.