tamilnadu

சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு

 

உதகை, ஜன.26- நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  அலுவலகத்தில், காலியாக உள்ள சாலை ஆய்வா ளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது, நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவல கங்களில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சாலை ஆய்வாளர் பணி நியமனத்திற்கு விண்ணப் பிக்கத் தேவையான விபரங்கள் www.nilgiris.nic.in என்ற இணையத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் ஜன.27 ஆம் தேதி முதல் மேற்படி உள்ள இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து, பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) அலுவலகத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு பிப்.25 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணிகளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

;