tamilnadu

img

அணுஆயுத நாடுகளால் பேரழிவின் நிழலில் உலகம்...

ஜெனீவா:
அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளால் பேரழிவின் நிழலில் உலகம் வாழ்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல்தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபை உயர்மட்ட கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில்193 ஐ.நா.சபை உறுப்பு நாடுகளில் 103 நாடுகள் பங்கேற்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,இஸ்ரேல் ஆகிய நாடுகள் இக்கூட்டத்தை புறக்கணித்தன. இக்கூட்டத்தில் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசியதாவது:

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகைமை, நம்பிக்கையின்மை, பதற்றங்கள் காரணமாக யோசிக்கத் துணிகின்றன. அணு ஆயுதங் களை நவீனப்படுத்துதல் என்பது தர அளவிலான அணு ஆயுதப் போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அணு ஆயுதங்களை அதிகரிப்பதல்ல, மாறாக அதன் வேகத்தையும் திறனையும் அதிகரித்து இன்னும் துல்லியமாக்குவது பற்றிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான ஆயுதக்குறைப்பு ராணுவ ஒப்பந்தம்அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. இருநாடுகளும் இந்த ஒப்பந்த காலத்தை நீட்டிக்கவேண்டும், இதில் தாமதிக்கக் கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும். ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை எனில் மீண்டும் ஆயுதப்போட்டியே ஏற்படும்.அணு ஆயுதப் பெருக்கத் தடை ஒப்பந்தம்இந்த ஆண்டு 50-வது ஆண்டை எட்டுகிறது. இது மிக முக்கியமானது, இந்த ஒப்பந்தம் மட்டுமே அணு ஆயுதக் குறைப்பையும் அணுஆயுதப்பரவலையும் தடுக்க முடியும்.அணு ஆயுதப் பெருக்கத் தடை மற்றும்பரவல் தடுப்பிலிருந்து அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் ஒப்பந்தங்களுக்கு நாடுகள் வந்தடைவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.2017 ஜூலை மாதத்தில் 122 நாடுகள் அணுஆயுதங்களை தடை செய்வது பற்றிய ஒப்பந்தத்தை முன்னெடுத்தன. 50 நாடுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தால் 90 நாட்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். செப்டம்பர் 30 ஆம் தேதியன்று மலேசியா இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதால் தற்போது சம்மதம் தெரிவித்த நாடுகள் எண் ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.