ஜெனிவா,ஜூன் 07- கொரோனா தொற்று பரவலை தடுக்க மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழி காட்டுதல்கள் வருமாறு: புதிய ஆராய்ச்சியின் அடிப்படையில், துணி முகக்கவசம் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட வர்கள் அல்லது உடல்நலப் பிரச்சனை கள் உள்ளவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத இடங்களில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அசுத்தமான கைகளைப் பயன்படுத்தி சரி செய்வதோ அல்லது மீண்டும் மீண்டும் கழற்றி மாட்டுவதோ கூடாது. இதனால் மக்கள் தங்களுக்கு தாங்களே தொற்றை பரப்பிக் கொள்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். கொரோனா வைரஸ் பரவா மல் தடுக்க அனைவரும் பொது வெளியில் மூன்று அடுக்குகள்கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.