tamilnadu

img

நியூசிலாந்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து மிக பெரிய போராட்டம்!

பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி, பருவநிலை மாற்றத்தால் நாம் பேரழிவை சந்திப்போம் என உலக தலைவர்களை கடுமையாக சாடினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இதற்கிடையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த  போராட்டத்தில் உலக அளவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து, இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தினர். இதுவரை அந்நாட்டில் இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.