tamilnadu

img

ஸ்பெயின், இத்தாலியில் குறையத் தொடங்கியது தாக்கம்

அமெ. நிலை என்ன?

மாட்ரிட்/ரோம்/வாஷிங்டன், ஏப்.5- சர்வதேச அளவில் கொரோனாவால் ஞாயிறு மாலை 5 மணி வரை 12,17,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65,831 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2,53,698 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,11,637 ஆக அதிகரித்து, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்கு அடுத்த எண்ணிக்கையை ஸ்பெயின் கொண்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,759 ஆக உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,362 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 20,996 பேர்.

விரைவில் மீளுமா இத்தாலி?

உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண் ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வரு கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில வாரங்களாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது அது குறைந்து வருகிறது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

ஸ்பெயினிலும் குறையத் தொடங்கிய கொரோனா தாக்கம்

கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படும் கட்டத்தை கிட்டத்தட்ட தாண்டும் நிலையில் இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். எனினும், அந்நாட்டில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காலத்திற்கு தயாராகுங்கள்: டிரம்ப்

ஆனால் அமெரிக்காவில் நிலைமை மோசமாக உள்ளது. கடுமையான வாரத்திற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி டிரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இந்த வாரம் கொரோனா வைரஸினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரலாம் என வெள்ளை மாளிகை கணித்திருந்தது. முன்பே கூறியது போல உயிரிழப்பு கள் ஏற்படும் என எச்சரித்த டிரம்ப், ஈஸ்டர் தினத்தன்று அனை வரும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் அறிவுரை வழங்கினார்.