tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அவரது தோழியான ரியா சக்ரவர்த்தியின் மேலாளரான சாமுவேல் மிராண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக ளில் ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 9.5 லட்சம் இந்தியர்கள் தாயகம்  திரும்பி உள்ளனர் என்று வெளியுற வுத்துறை தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர் களை மீண்டும் தாராள மாக தமிழகத்துக்கு அழைத்து வரலாம் என்று தொழில் கூட்டமைப்பினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி யுள்ளார்.

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கேடிஎம்  250 டியூக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளி யான தகவல் தவறானது என்றும், பள்ளிகளை திறப்பது குறித்து முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி விப்பார் என்றும் பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

பிரின்ஸ் எட்வர்டு தீவு பகுதியில் வியாழனன்று இரவு 11.36 மணி யளவில் 6.3 ரிக்டர் அளவில் கடுமை யான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.