தியாகி ராமநாதன் நினைவு நாள்
சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் கிரா மத்தில் வசதியான குடும் பத்தில் பிறந்தவர் தோழர் ராமநாதன். தோழர் பி.சீனி வாசராவ் அவர்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டா னவர் ராமநாதன்.
தமது பகுதியில் செங்கொடி விவசாயிகள் சங்கத்தைக் கட்டுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் ராமநாதன். கண்டர மாணிக்கம் தோழர் கிருஷ்ணனுடன் இணைந்து விவசாயிகளை அணி திரட்டினார். விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து போராடினார் ராமநாதன். விடுமா காவல்துறை? தோழர் ராமநாதனைக் குறி வைத்த போலீசார் வளை யப்பட்டி கிராமத்தில் சுற்றி வளைத்து கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும்போது மதுரை தோழர் பாலுவுக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய தோழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அவர்களைக் கொடூரமாகச் சித்ரவதை செய்தது காவல்துறை. 1959ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் நாள் போலீசார் ராமநாதனைத் தடியால டித்துப் படுகாயமடையச் செய்து சிறைக் கொட்டடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கச் செய்துப் படுகொலை செய்தனர். சிவகங்கை தோழர் ராமநாதன் தியாகியானார்.
-பெரணமல்லூர் சேகரன்