tamilnadu

img

மீண்டும்  கொரோனா வைரசை தோற்கடித்து விட்டோம் - ஜெசிந்தா ஆர்டென் மகிழ்ச்சி

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா  நாங்கள் மீண்டும் கொரோனா வைரசை தோற்கடித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்
நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டது.  இந்த நிலையில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால்,மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் 1,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1,790 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில் கொரோனா இரண்டாம் கட்ட அலையை நாம் கட்டுப்படுத்திவிட்டோம். நாம் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸைத் தோற்கடித்துவிட்டோம். இதனைத் தொடர்ந்து நாம் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.