tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன்னுக்கு மேல் பழமையான மரங் கள் வெட்டி சாய்க்கப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் தமிழக ஆளு நருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 41 ஆயிரத்திற்கும் அதிகமான சுகா தார மையங்களில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 8.8 கோடிக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட சீன செயலி யான டிக்டாக் தனது தலைமை யிடத்தை மாற்றுவது குறித்து ஆலோ சித்து வருவதாக கூறப்படுகிறது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாண வர்களுக்கு விலையில்லா புத்த கம், கல்வி உபகரணங்கள் வழங்கும் போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் குறித்து தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.

திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் புத்தகம் விநி யோகம் செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் அமேசான் காடுகளில் மரங்களை வெட்டிய பின்னர் தீ வைக்க 120 நாட்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசால் திட்டமிடப் பட்டுள்ளது.

அனைத்து மொபைல்களும் மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் வகையில் புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்த நிலையிலே உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.77.91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடை யிலான மோதல் அதிகரித்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை என்று அமெரிக்கா வின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரி வித்துள்ளார்.

நேபாளத்தில் கனமழையால் ஏற் பட்ட நிலச்சரிவில் சிக்கி தற் போது வரை 12 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர்.