சிரியாவில் துருக்கியின் கண்காணிப்புத் தளங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் விமர்சித்துள்ளது.
துருக்கி எல்லைப்பகுதியில் சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று குற்றம் சாட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிரானதுருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கிப்படையின் 12 கண்காணிப்புத் தளங்கள் இருக்கும் என்றும் துருக்கி தனது தாக்குதலை வேண்டுமென்றால் மீண்டும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இந்த முடிவை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, " துருக்கி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் எல்லையோரங்களிலும் எந்த மாதிரியான தளங்களையும் வைத்துக்கொள்ளலாம் . ஆனால் சிரிய பகுதியில் தனது கண்காணிப்புத் தளங்களை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது