tamilnadu

img

நெதர்லாந்தில் பினராயி விஜயன்

ஆம்ஸ்டர்டாம்:

கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவல் சார்ந்த பயணமாக நெதர்லாந்து சென்றார். அவருக்கு இந்திய தூதர் வேணு ராஜாமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலையாளிகள் சமூக பிரதிநிதிகளும் வரவேற்பில் பங்கேற்றனர்.


வெள்ளப்பெருக்கை எதிர்கொள்வது குறித்த நெதர்லாந்தின் முன்மாதிரிகளை அறிந்து கொள்வது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மே 13ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் ‘புனரமைப்பு’ மாநாட்டில் உரையாற்ற உள்ளார். பிரபல அமெரிக்க பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். கேரளம் எதிர்கொண்ட பெருவெள்ள அனுபவங்களை முதல்வர் பினராயி விஜயன் இந்த மாநாட்டில் பகிர்ந்துகொள்ள உள்ளார்.