tamilnadu

img

நாடு கடத்தப்படுவது நடுவானில் நிறுத்தம்

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப் பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரை யிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கி விடப்பட்டது. விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தர வால் நடேசலிங்கம், பிரியா இவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டு இந்தக் குடும்பம் கீழே இறக்கிவிடப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தை அவர் களின் குயின்ஸ்லாந்து வீட்டில் இருந்து பல வந்தமாக வெளியேற்றியபோது அவர் களுக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்தி ரேலிய நாடு முழுவதும் எதிரொலித்தன. அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அங்கீகாரம் கிடைத்தது.

“நம் நாட்டின் மூலம் பாதுகாப்பைப் பெறு வதற்கு அவர்கள் உரியவர்கள் அல்லர்” என்று உள்ளூர் ஊடகங்களிடம் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார். அவர்களின் மூத்த மகள், தற்போது நான்கு வயதுள்ள கோபிகாவும், இளைய மகள், 2 வயதுள்ள தருணிகாவும் ஆஸ்திரேலியாவில்தான் பிறந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் குடும்பம் பிலோயெலா என்ற சிறு நகரில் உழைத்து வாழ்ந்து வந்தது. கடந்த  ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் பலவந்த மாக தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். விடியற்காலை நேரத்தில் ஒரு டஜன் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கைக்கு கடுமையான சமூக எதிர்வினை ஏற்பட்டது. அவர்களை திரும்ப அழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தில் 1.2 லட்சம் பேர் ஒப்பம் இட்டனர். இதனிடையே, வெள்ளிக்கிழமை ஒரு திருப்பம் ஏற்பட்டது. இந்த தம்பதியின் இளைய மகளை நாடு கடத்துவதற்கு அடுத்த புதன்கிழமை வரை தடை விதித்து கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பலனை பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்த அரசு அனுமதிக்குமா என்று தெரியாத நிலை இருந்தது.

சில மணி நேரங்களில் இந்தக் குடும்பம் நாடுகடத்தப்படும் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு மெல்போர்ன் விமான நிலையம் விரைந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு புறப்பட்டுவிட்டது. எனினும் அதன் பிறகும் போராடிய வழக்குரைஞர்கள் விமானம் நாட்டு எல்லையைத் தாண்டுவதற்கு முன்பாக கடைசி கட்டத்தில் இளைய சிறுமி தருணிகா நாடு கடத்தலுக்கு எதிராக ஓர் உத்தரவை வெற்றிகரமாகப் பெற்றனர்.

தொலைபேசி மூலம் ஒரு நீதிபதி வாய்மொழி தடை உத்தரவு அளித்த போது விமானம் நீண்ட தூரம் பறந்து விட்டது. எனினும், நாட்டின் வடக்கு எல்லைக்கு  அருகில் கடைசியாக உள்ள டார்வின் விமான நிலையத்தில் அதிகாலை 3 மணி யளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. மெல்போர்னில் இருந்து டார்வின் 3,000 கி.மீ. தூரம். அவர்கள் உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர்களின் நண்பர் அங்கேலா ஃப்ரெடரிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். விமானம் பறந்தபோது சிறுமிகள் அழுது கொண்டிருந்தனர் என்றும்  அவர்கள் அருகில் அமர அவரது தாய் அனு மதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறி னார். வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆஸ்திரேலி யர்கள் இந்தக் குடும்பம் நடத்தப்பட்ட விதம் குறித்த தங்கள் கோபத்தை வெளி யிட்டதுடன், அரசாங்கம் அவர்களிடம் சற்று இரக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.