ஜெனீவா:
கொரோனா தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன என்றும் சரியான நடைமுறையை கையாள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன. அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது. தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் சரியான நடைமுறையை கையாள்வது அவசியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.