tamilnadu

img

தாய்லாந்தில் கோர விபத்து... பேருந்து மீது ரயில் மோதி 20 பேர் பலி

பாங்காக்
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் முக்கிய நகராக இருப்பது சாச்சோ யெங்சாவோ. இந்த பகுதியில் பிரசித்திபெற்ற புத்த கோவில் உள்ளது. சுற்றுலா தல அந்தஸ்தில் இருப்பதால் தினசரி மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இந்த கோவிலுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஒரு சுற்றுலா குழு சாச்சோ யெங்சாவோ நோக்கி சென்று கொண்டிருந்தது.

கிலாங் கவீங் கிலன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங் கடக்க முயன்ற பொழுது, திடீரென வந்த ரயில் பேருந்து மீது பலத்த சப்தத்துடன் மோதியது. இந்த கோரா விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.