சென்னை, ஜூன் 8- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி யை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சனிக்கிழமை (ஜூன்8) செய்தியாளர்களிடம் பேசுகை யில், தென்மேற்கு பருவக் காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந் துள்ளது. தெற்கு அரபிக் கடல், லட்சத் தீவுகள், குமரிக்கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகரித்திருப்பதால் தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.இதன் காரணமாகவும் வெப்பச் சலனம் கார ணமாகவும் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத் தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செ.மீ. மழை பதி வாகியுள்ளது. திருவள்ளூர், காஞ்சி புரம், திருவண்ணாமலை, கரூர், பெரம்ப லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 3 - 4 டிகிரி அதிகமாகப் பதிவாகும் என்று தெரி வித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த புவியரசன், சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.