தாமிரப் பட்டயத்தில் திருக்குறள் வெளியீடு
தஞ்சாவூர் அக்.21- தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் திங்களன்று நடைபெற்ற சரசு வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் பொது நூலகமாக்கப்பட்ட தின் நூற்றாண்டு விழாபள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரும் சரசுவதி மகால் நூலக இயக்கு நருமான ஆ.அண்ணாதுரை வர வேற்றார். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் உலகப் பொதுமறை திருக்குறளை தாமிரப் பட்டயத்தில் வெளியிட, வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் இரா. துரைக்கண்ணு சரஸ்வதி மகால் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாநிலங்க ளவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம் ஆகியோர் பெற்று கொண்ட னர். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் நூற்றாண்டு விழா நினைவு அஞ்சல் தலை யினை வெளியிட பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், வேளாண்மைத்துறை அமைச்சர்இரா.துரைக்கண்ணு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசும்போது, சரசுவதி மகால் நூலகத்திற்கு வழங்கப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு நிதியை ரூ.1 கோடியாக உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து தஞ்சாவூர் மத்திய நூல கத்தில் பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப் பட்டபடி தமிழிசை நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்த சிறப்பு நூல கத்தினை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில் பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ராமநாதன், நூல கத்துறை இயக்குநர் குப்புசாமி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ் தான் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் ரோஸ் நிர்மலா கலந்து கொண்டனர்.