tamilnadu

img

நூறு நாள் திட்ட வேலையை 200 நாளாக உயர்த்தக் கோரிக்கை

பொன்னமராவதி, அக்.6- புதுக்கோட்டை பொன்னமராவதியில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு சிறப்பு பேரவை கூட்டம் பி.நாகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ச.மாரிகண்னு, ஆர்.பிரதாப்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐடி.யு.சி மாவட்ட தலைவர் கே.ஆர்.தர்மராஜன், வி.தொ.சா மாவட்ட செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு, வி.தொ.ச. மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான ந.பெரிய சாமி சிறப்புரை யாற்றினார். பேரவையில் 100 நாள் திட்ட வேலையை 200 நாட்கள் ஆக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ 400 சம்பளம் கொடுக்க வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ரூ 3 ஆயிரம்  ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. பேரவையை தொடர்ந்து மாலையில் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக தீர்மானங்கள் விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொன்னமராவதியில் கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் சப்-ஜெயில் அமைக்க வேண்டும். தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அமர கண்டான் ஊருணியில் கரைகளை பலப்படுத்தி நடைபாதை சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். சின்ன திரும்மகேணி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.