சென்னை தரமணியிலுள்ள ஆசியன் ஊடகவியல் கல்லூரி அரங்கில் ஞாயிறன்று (பிப். 2) நடைபெற்ற நிகழ்வில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதிய ‘செபாஸ்டியன் அன்டு சன்ஸ்’ நூலை வரலாற்று ஆய்வாளர் ராஜ்மோகன் காந்தி வெளியிட்டார். நூலாசிரியர் டி.எம்.கிருஷ்ணா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் உடனிருந்தனர்.