tamilnadu

img

காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் பதவியேற்பு

காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த மகேஷ்குமார் பர்ன்வால் பணியிட மாற்றம் செய்ததை அடுத்து காரைக்காலில் புதிய மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்று நண்பகல் 12 .35 மணி அளவில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூரானில் ASP ஆகவும் சண்டிகரில் ASP மற்றும் SP-ஆகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். அதே சண்டிகரில் விஜிலென்ஸ் SP-ஆகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். பாண்டிச்சேரியில் போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளராகவும், IRBN - Commendent-ஆகவும் பணிபுரிந்த நிஹரிகா பட் தற்போது காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.