tamilnadu

img

சிபிஎம் முயற்சியால் நரிக்குறவர்,இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள், தூய்மை பணியாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
 
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு 144,தடையுத்தரவு பிறப்பித்த பின்பு வாழ்வாதாரத்தை இழந்துதாவிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கிரியிலுள்ள நரிக்குறவர் இனமக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் வி.கோவிந்தசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்தார் 
அதன் அடிப்படையில்,

காட்டேரி ஊராட்சியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் அனுமந்தீர்த்தத்தில் உள்ள இருளர் இனமக்கள் மற்றும் தூய்மைபணியாளர்களுக்கு  நிவாரணம் கிடைக்கும் வகையில் வகையில் காவல்துறை மாவட கூடுதல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு ,காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், இலவச முக கவசம் ஆகியவை அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசு, ஜெயகாந்தன், வட்டாட்சியர் செந்தில்குமரன், துணை வட்டாட்சியர்கள் குமார், அரவிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினரும் காட்டேரி ஒன்றியகவுன்சிலரமான வி.கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார், துணைத்தலைவர் ராஜமாணிக்கம் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ்,மாவட்டகுழு உறுப்பினர் வி.சுப்பிரமணி நிர்வாகிகள் பி.வரதராஜ்,ஆகியோர் பங்கேற்றனர்.

நிவாரண பொருட்களை வழங்கிய ஊத்தங்கரை காவல்துறையினருக்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்தசாமிக்கும் நரிக்குறவர் ,இருளர் இன மக்கள் மற்றும் தூய்மை காவலர்கள் தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்,